விராலிமலை சுப்பிரமணியர் கோயில் உண்டியல் திறப்பு
புதுக்கோட்டை மாவட்ட தேவஸ்தான திருக்கோயில்களை சேர்ந்த விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோயில்
புதுக்கோட்டை மாவட்ட தேவஸ்தான திருக்கோயில்களை சேர்ந்த விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோயில் உண்டியல் இன்று திறக்கப்பட்டு காணிக்கையை எண்ணும் பணி மலைக்கோயில் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை தேவஸ்தான திருகோயில்களின் உதவி ஆணையர் ம. ரமேஷ், செயல் அலுவலர் ஆர். கருணாகரன் தலைமையில், இன்று உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது, இதில் ரூ. 3 லட்சத்தி 88 ஆயிரத்து 975 ரொக்கத்தையும், 8 கிராம் தங்கம், 215 கிராம் வெள்ளி, உக்ரைன் கரன்சி 5 ஆயிரத்தில் 2, மலேசியா ரிங்கிட் 50 ல்1, 20 ல் 1, 10 ல் 1, 1 ல் 2-ம் பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
மேற்பார்வையாளர் ஆர். மாரிமுத்து, மற்றும் விளக்கு பூஜை மகளிர் குழுவினர், பொதுநல அமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்று உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.