முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சியில் இன்று பா.ம.க. மாநாடு

திருச்சி, செப்.19: பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) மத்திய மண்டல மாநாடு நடைபெறுகிறது.

Updated On : 20 செப்டம்பர், 2015 at 8:27 AM
பகிர்:

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) மத்திய மண்டல மாநாடு நடைபெறுகிறது.

2016 பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி இக்கட்சி ஏற்கெனவே கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் மாநாடுகளை நடத்தியுள்ள நிலையில், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கி மத்திய மண்டல மாநாட்டை தற்போது நடத்துகிறது.

திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் க. உமாநாத் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சி நிறுவனர் டாக்டர் ச. ராம்தாஸ், மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்,  பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.