தற்போதைய செய்திகள்

திருச்சியில் இன்று பா.ம.க. மாநாடு

திருச்சி, செப்.19: பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) மத்திய மண்டல மாநாடு நடைபெறுகிறது.

கு. வைத்திலிங்கம்

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) மத்திய மண்டல மாநாடு நடைபெறுகிறது.

2016 பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி இக்கட்சி ஏற்கெனவே கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் மாநாடுகளை நடத்தியுள்ள நிலையில், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கி மத்திய மண்டல மாநாட்டை தற்போது நடத்துகிறது.

திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் க. உமாநாத் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சி நிறுவனர் டாக்டர் ச. ராம்தாஸ், மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்,  பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT