ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்லும் யாத்ரீகர்களுக்கு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி இன்று கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஹஜ் புனித பயணம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 340 பேர் கொண்ட முதல் யாத்ரீகர்கள் அடங்கிய குழு இன்று புறப்பட்டது. ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் முதல் யாத்ரீகர்கள் குழு செல்லும் விமானத்தை அந்நாட்டு முதல்வர் மெஹபூபா முஃப்தி கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார்.
இந்தாண்டு ஹஜ் செல்வதற்காக 6,457 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 விமானங்கள் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.