சென்னை
தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வரை முக்கிய துறைகளின் உயரதிகாரிகள் முகாமிட்டிருந்தனர்.
குறிப்பாக, பொதுத்துறை, உள்துறை முதன்மைச் செயலாளர்கள் நள்ளிரவுக்குப் பிறகும் தலைமைச் செயலகத்திலேயே இருந்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம் என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்கவும், சில முக்கிய முடிவுகளை எடுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டிருந்தனர்.
ஊழியர்கள் அனைவரும் பிற்பகலிலேயே புறப்பட்டுச் சென்ற நிலையில், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா ஆகியோர் தலைமைச் செயலகத்திலேயே நள்ளிரவு வரையிலும் காத்திருந்தனர்.
அரசியல் ரீதியாக அதிமுக எடுக்கும் முடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் முக்கிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.