சென்னை,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையில் வெள்ளிக்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கட்டட அரங்கில், மாலை 3.30 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் கலந்து கொள்ளுவார்கள் என, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.