தற்போதைய செய்திகள்

சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார்

தினமணி

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி தேவாரம் பாடுவதற்காக பல போராட்டங்களை நடத்திய சிவனடியார் உ.ஆறுமுகசாமி (94) சனிக்கிழமை காலமானார்.

சிதம்பரம் அருகே குமுடிமூலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனடியார் உ.ஆறுமுகசாமி (94). இவர் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தேவாரம் பாடுவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி நீதிமன்ற உத்தரவை பெற்று, கனகசபை மீது ஏறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேவாரம் பாடினார். மேலும் அதற்காக அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அவருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கி ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கடலூரில் உள்ள மகள் திலகவதி வீட்டில் இருந்த சிவனடியார் ஆறுமுகசாமி சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு காலமானார். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான குமுடிமூலை கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ஆறுமுகசாமிக்கு 6 மகன்கள், 2 மகள்கள். இதில் 4 மகன்கள் இறந்துவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT