தற்போதைய செய்திகள்

நடிகர் சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் மீண்டும் சோதனை

DIN

சென்னை: சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் மீண்டும் சோதனை நடத்திவருகின்றனர்.

இன்னும் கூடுதலாக ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. நடிகர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் இல்லத்தில் கடந்த 7-ஆம் தேதியன்று வருமான வரித்துறையினர் 'திடீர்' சோதனை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

நேற்று காலை 11.30 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் இரவு 7.20 மணி வரை தொடர் விசாரணை நடந்தது. 

இந்நிலையில் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் தற்பொழுது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து மீண்டும் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT