சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென விபத்திற்குள்ளானது.
இந்நிலையில் சுக்மா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் தேடும் வேட்டையில் கோபுரா கமாண்டோ படையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் சிண்டாகுப்பா என்ற வனப்பகுதியில் இறங்கும் போது திடீர் விபத்திற்குள்ளானது. இதில் 5 வீரர்கள் காயமடைந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.