இஸ்லாமாபாத்: அடையளம் தெரியாத சிலர் பாகிஸ்தான் நாட்டின் அரசு இணையதளத்தை முடக்கியுள்ளனர்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய கீதத்தை பாகிஸ்தான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் "பாக்கிஸ்தான் ஹக்கர்ஸ் க்ரூ" என்ற ஹேக்கர் குழுக் பதிவிறக்கம் செய்யும் பக்கங்களில் இந்திய அரசாங்கத்தையும் இந்திய ஆயுதப்படைகளையும் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பாக்கிஸ்தான் அரசு இணையதள பராமரிப்பு பலவீனமாக இருப்பதையே ஹேக்கர்களின் முடக்கம் மூலம் தெரியவந்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்னதாக 30 பாகிஸ்தான் அரசு இணையதளங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டது. பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர் குல்பூஷண் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது