முகப்பு
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: ஆபத்தான நிலையில் சிகிச்சை

அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியாவை சேர்ந்த மாணவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:19 PM
பகிர்:

ஹைதராபாத்: அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியாவை சேர்ந்த மாணவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் உபால் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர்(30). இவர் அமெரிக்காவின் இலினாய்ஸ் நகரில் உள்ள டெவ்ரி பல்கலையில் மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் மற்றும் டெலிகம்யூனிகேசன்ஸ் படித்து வருகிறார். அவர் நேற்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் மர்ம நபர் சுட்டதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.

இது தொடர்பாக அவரது தந்தை கூறுகையில், சிகாகோவில் உள்ள அல்பனி பூங்கா அருகே நிறுத்தப்பட்டிருந்த தனது காரை எடுக்க சென்ற போது அக்பரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும், கன்னத்தில் குண்டு பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகனை பார்ப்பதற்காக அவரது குடும்பம் அமெரிக்கா செல்வதற்கு அவசர விசா வழங்க ஏற்பாடு செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர், மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகாரித்து வரும் நிலையில்,  இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச், ஜூன் மாதத்தில் மட்டும் 3 இந்திய மென்பொறியாளர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →