தற்போதைய செய்திகள்

வந்தவாசி அருகே திருமணமான சில நாட்களிலேயே காணாமல் போன புதுப்பெண்: போலீஸார் விசாரணை

DIN

வந்தவாசி அருகே திருமணமான சில நாள்களிலேயே புதுப்பெண் காணாமல் போனது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வந்தவாசியை அடுத்த கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(24). இவரது மனைவி கவுசல்யா(19). இவர்களுக்கு திருமணமாகி 20 நாள்கள் ஆகிறது. 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவுசல்யாவை வீட்டிலேயே விட்டுவிட்டு மணிகண்டன் மற்றும் அவரது பெற்றோர் விவசாய வேலைக்கு சென்றுவிட்டனர். பின்னர் விவசாய வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது கவுசல்யா காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மணிகண்டனின் தந்தை எட்டியப்பன் அளித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீஸôர் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT