தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு வாசலில் கோலமிட்டு இருந்த பெண் உருட்டு கட்டையால் அடித்து கொலை

தூத்துக்குடியில் வீட்டு வாசலில் கோலமிட்டு  இருந்த  பெண் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தி. இன்பராஜ்

தூத்துக்குடியில் வீட்டு வாசலில் கோலமிட்டு  இருந்த  பெண் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள முத்துகிருணாபுரத்தை சேர்ந்தவர்  மாயாண்டி.  இவர் கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி  செண்பகவள்ளி இவருக்கும் எதிர்  வீட்டில் இருக்கும் அம்பிகாபதி  என்பவருக்கும் இடையே  அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலையில் வீட்டின்  வாசலில் கோலயிட்டு இருந்த செண்பகவள்ளிவை அம்பிகாபதி உருட்டு கட்டையால் தலையில் அடித்தல் படுகாயம் அடைந்த செண்பகவள்ளி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த வந்த  வடபாக போலீசார்  உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில்  முன்விரோத காரணமாக  செண்பகவள்ளியை கொலை செய்தாக  தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் அம்பிகாபதி சரண் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த  சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT