ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தமிழ் இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டத்தில் சினிமா நட்சத்திரங்கள் பங்கெடுத்து கவன ஈர்ப்பை மாற்றி விடக் கூடாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் டுவிட்டரில் பதிந்துள்ள பதிவு:
குரல் கொடுக்க வேண்டிய கடமையை மாணவர்கள் கையில் எடுத்துள்ளனர். அது அவர்களின் குரலாக இருக்க வேண்டும். முதல்முறையாக பெருமைப்படும் அளவுக்கு நல்ல முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மாணவர்களைத் தூண்டுவார்கள்.
இப்போது மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற ஒட வைத்திருக்கிறார்கள். இதில் சினிமா நட்சத்திரங்கள் பங்கெடுத்து அந்த ஒளியை வாங்கிக் கொள்ளக் கூடாது என நான் நினைக்கிறேன். இது அவர்களுடையப் போராட்டம். நாளைய அரசியல்வாதி அங்கு இருக்கக்கூடும். ஆகவே அவர்களை மிரட்டக் கூடாது.
அறப்போராட்டத்தில் ஈடுபடும் அவர்களைத் தடுக்கும் அருகதை யாருக்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.