தற்போதைய செய்திகள்

பள்ளி பாடத்தில் பண மதிப்பிழப்பு, ரொக்கமற்ற பொருளாதாரம்

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு, ரொக்கமற்ற பொருளாதாரம் ஆகிய இரு பிரிவுகளையும் பன்னிரெண்டாம் வகுப்பில்

PTI

ஜெய்ப்பூர்: உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு, ரொக்கமற்ற பொருளாதாரம் ஆகிய இரு பிரிவுகளையும் பன்னிரெண்டாம் வகுப்பில் கற்பிக்கப்படும் பொருளாதார பாடத் திட்டத்தில் சேர்க்க ராஜஸ்தான் மாநில இடைநிலை பள்ளிக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரியத்தின் செயலர் மேக்னா சௌதரி, பிடிஐ செய்தியாளரிடம் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்துவரும் வேளையில், அதுதொடர்பான பாடப் பிரிவை பன்னிரெண்டாம் வகுப்பில் கற்பிக்கப்படும் பொருளாதார பாட புத்தகத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டிலிருந்து இந்தப் புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும் என்றார் மேக்னா சௌதரி.
பாஜக ஆளும் ராஜஸ்தானில் ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை என்ற இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
நாட்டிலேயே ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை அதிகம் மேற்கொள்ளும் முதல் 5 மாவட்டங்களில் ராஜஸ்தானில் உள்ள அஜ்மரும் ஒன்று.
ஜெய்ப்பூரில் பயணச்சீட்டை ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை மூலம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT