மேற்கு வங்கத்தில் மதக்கலவரம் ஏற்பட்டதையடுத்து, பாசிரட் மற்றும் பாதுரியா பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக ஊடகங்கள்மூலம் வதந்திகள் பரவாமல் இருக்கவும், இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, கலவரம் ஏற்பட்ட விவகாரத்தில், மேற்கு வங்க ஆளுநர் திரிபாதி, தன்னை மிரட்டியதாக குற்றம் சாட்டியிருக்கிறார், முதல்வர் மம்தா பானர்ஜி. மேலும், ஆளுநர் போல அல்லாமல், பா.ஜ.க. மாவட்டத் தலைவர்போல அவர் பேசினார் என்று மம்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, அங்கு மத்திய துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.