சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் எதிர்கொள்ள தயார் என அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க கோரிக்கை வலுத்துள்ள சூழலில் இதுகுறித்து அவர் இன்று சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை. மிகவும் வெளிப்படையாகத் தான் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்களும் உள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் எதிர்கொள்ள தயார் என்று கூறினார்.