தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் எதிர்கொள்ள தயார்: பிரதாப் ரெட்டி

DIN

சென்னை:  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் எதிர்கொள்ள தயார் என அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க கோரிக்கை வலுத்துள்ள சூழலில் இதுகுறித்து அவர் இன்று சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை. மிகவும் வெளிப்படையாகத் தான் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்களும் உள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் எதிர்கொள்ள தயார் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT