தற்போதைய செய்திகள்

கத்தார் நெருக்கடியில் குவைத் சமரச முயற்சி 

கத்தார் மற்றும் சவூதி அரேபியா, பஹ்ரைன் இடையிலான பிரச்சனையில் குவைத் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

DIN

கத்தார் மற்றும் சவூதி அரேபியா, பஹ்ரைன் இடையிலான பிரச்சனையில் குவைத் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதாக கூறி 5 நாடுகள் கத்தார் உடனான உறவை துண்டித்துள்ளன. 5 நாடுகளின் துண்டிப்பால் கத்தாரில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் குவைத் தலையிட்டு சமரசம் செய்ய முயன்றுள்ளது.

இதுகுறித்து குவைத் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: - குவைத் மன்னர் ஷேக் சபா அல்-அகமது அல் சபா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு கத்தார் நாட்டு தலைமை அதிகாரியுடன் பேசியதாகவும் அப்போது நிலைமையை இன்னும் மோசமாக்க கூடிய நடவடிக்கைகளை கத்தார் எடுக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு மதிப்பளித்து கத்தார்  மக்களுடன் நெருக்கடி நிலை குறித்து பேச இருந்த அந்நாட்டு ஆட்சியாளர் அல் தானியின் பேச்சு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் குவைத் வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் கத்தார் உடனான உறவை துண்டித்துப்பதாக நேற்று அறிவித்திருந்தன, இதையடுத்து லிபியா மற்றும் மாலத்தீவு கத்தார் உடனான தூதரக உறவை துண்டிக்க முடிவு செய்து அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X தளத்தில் Comment Off “கருத்து சுதந்திரம் பற்றி திருமா பேசுகிறார்!” அண்ணாமலை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT