தற்போதைய செய்திகள்

சோமாலியா நாட்டில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில், 15 பேர் உயிரிழப்பு

DIN

சோமாலியா நாட்டில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில், 15 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியா தலைநகர் மொகாதிசூவில் சப் பிரிவினை கோரி வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அல் ஷெபாப் இயக்கத்தினர் இன்று வதாஜிர் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்தில், குண்டு வைத்தனர்.

சக்திவாய்ந்த இந்த குண்டுவெடித்ததில், பொதுமக்கள் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர  விசாரணை மேற்கொண்டுள்ளனர். மொகாதிசூவில் அண்மைக்காலமாக, பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT