சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசியலுக்கு நான் வருவேன் என என்னை சந்திப்பவர்கள் கூறுவதை மறுக்கவில்லை.
மேலும் அரசியலுக்கு வருவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறினார். அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுக்கும் போது தெரிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.
செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதியில் மீண்டும் ரஜினி ரசிகர்களை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் தான் ரசிகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் அடுத்த 6 மாதத்துக்குள் ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக கூறியிருப்பது அரசியல் பிரவேசம் குறித்தும் கட்சிக்குறித்தும் ஆலோசிக்கவே என கூறப்படுகிறது.