சென்னை மெரினாவில் திருவள்ளுவர் சிலை அருகே மாணவர்கள் மீண்டும் போராட்டம்
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திருவள்ளுவர் சிலை அருகே
சென்னை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திருவள்ளுவர் சிலை அருகே மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 25க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக சில இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர் அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதுபோல் காஞ்சிபுரத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.