சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் தூத்துக்குடி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த சூழலில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.