அகர்தலா: திரிபுராவில் 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு தமது கட்சி தயாராக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் முகுல் ராய் இன்று கூறினார்.
திரிபுராவில் சி.பி.ஐ மார்க்சிஸ்ட் கட்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் பணிகளை முன்னிட்டு இரண்டு நாள் கட்சி கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர் தற்போது ஆளும் கட்சியாக உள்ள சி.பி.ஐ மார்க்சிஸ்ட் கட்சியை வரும் தேர்தலில் அதிகாரத்தில் இருந்து அகற்றுவோம் என்று முகுல் ராய் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது பா.ஜ.க தங்களுக்கு ஒரு பொருட்டல்ல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் பிரதான எதிர்கட்சி என்றார்.
மேலும் மேற்கு வங்கத்தில் அமைதியை சீர்குலைக்க எதிர்கட்சிகள் முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டினார். இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும், விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்க உள்ளதாகவும் கூறினார்.