தற்போதைய செய்திகள்

பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும்: அரசு அறிவிப்பு

DIN

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (நவ.14) பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் மழை தொடர்ந்தாலும் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை நேற்று இரவு வரை சில இடங்களில் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. . 

இதேபோன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இருப்பினும் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல
இன்று செவ்வாய்கிழமை செயல்படும் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT