தற்போதைய செய்திகள்

எந்த அரசாக இருந்தாலும் நடிகர் சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும்: கமல்ஹாசன் 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபத் திறப்பு விழா இன்று சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது

DIN

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபத் திறப்பு விழா இன்று சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:

மாநில, தேசிய, ஆசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். தமிழர்கள் எப்போதும் சிவாஜி கணேசனை நினைவில் கொள்வர்.

ஒரு வேளை நான் நடிகராக இல்லாவிட்டால் ஒரு ரசிகனாக இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பேன். எந்த அரசாக இருந்தாலும் நடிகர் சிவாஜி கணேசனை போன்றதொரு கலைஞரை மதித்தே ஆக வேண்டும்.

இதற்காக யாரிடமும் கெஞ்சி மன்றாட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: தடைகளைக் கடந்து மீண்டெழுந்த பங்குச்சந்தை! - மீள்பார்வை

கேரள இலக்கியத் திருவிழாவில் சுனிதா வில்லியம்ஸ்!

பிக் பாஸ் கமருதீனை தத்தெடுக்கத் தயார்: பாடகி சுசித்ரா அதிரடி!

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!

விடைபெற்றார் கலீதா ஜியா!

SCROLL FOR NEXT