நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபத் திறப்பு விழா இன்று சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
மாநில, தேசிய, ஆசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். தமிழர்கள் எப்போதும் சிவாஜி கணேசனை நினைவில் கொள்வர்.
ஒரு வேளை நான் நடிகராக இல்லாவிட்டால் ஒரு ரசிகனாக இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பேன். எந்த அரசாக இருந்தாலும் நடிகர் சிவாஜி கணேசனை போன்றதொரு கலைஞரை மதித்தே ஆக வேண்டும்.
இதற்காக யாரிடமும் கெஞ்சி மன்றாட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.