பல்கலைக்கழகங்களில் உள்ள மதம் தொடா்பான பெயா்களை நீக்க வேண்டும்: பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை
பல்கலைக்கழகங்களில் உள்ள மதம் தொடா்பான பெயா்களை நீக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் உள்ள மதம் தொடா்பான பெயா்களை நீக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்து பல்கலைக்கழகங்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் பற்றி இந்த அமைப்பை சேர்ந்த குழுவினர் சமீபத்தில் தணிக்கை செய்தனர்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடர்பான அவர்களின் தணிக்கை அறிக்கையில், ’மத்திய அரசின் நிதியுடன் இயங்கும் பல்கலைக்கழங்கள் மதச்சார்பு அற்றவை ஆகும். ஆனால், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களிலுடன் தொடர்புடையை மதப் பெயர்கள் மதச்சார்பின்மை என்ற கருத்துக்கு மாறாக உள்ளது.
இவற்றில் உள்ள மதப் பெயர்களை நீக்கிவிட்டு, அலிகார் பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம் என அழைக்கலாம். அல்லது, இவற்றை உருவாக்கியவர்களின் பெயர்களை இந்த பல்கலைக்கழங்களுக்கு சூட்டலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.