கூடுவாஞ்சேரி: சிங்கப்பெருமாள் கோவில் இடையே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களும், சென்னைக்கு வரும் ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
30 நிமிடங்களுக்கும் மேலாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.