வட கொரியா நேற்று ஜப்பான் வான்வழியாக பறந்து செல்லும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது. வடகொரியாவின் இந்த அத்துமீறிய செயலுக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது ஐநா மனித உரிமை கவுன்சிலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இது குறித்து கவலைப்படாத வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நமது நாடு அமெரிக்காவின் இராணுவ வலிமையின் நிகரான இலக்கை அடைந்துள்ளது.
அணு ஆயுத உற்பத்தியில், நிர்ணயித்த இலக்கை எட்டும் வரையில் உற்பத்தியைத் தொடர்வோம்” ஐ.நா. தடைகள் நீடித்திருந்தாலும் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படும் பல சாதனைகளை நாம் செய்துள்ளோம்.
நம் நாட்டின் இறுதி இலக்கு "என்பது அமெரிக்காவுக்கு நிகரான சமநிலையை எட்டுவதாகவும் அணு ஆயுத திட்டத்தில் நாம் முழுமை அடைந்துள்ளோம் என கூறினார்.