தற்போதைய செய்திகள்

ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பறிமுதல்

DIN

மும்பை: சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களை மும்பை ரயில் நிலையத்தில் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து ரயில் மூலம் விலை உயர்ந்த பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மும்பை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் போலீஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது அவரிடமிருந்து 10 ஆயிரம் கைக்கடிகாரங்கள், 6 ஆயிரம் ப்ளுடூத் ஸ்பீக்கர்கள், 17 ஆயிரம் மொபைல் ஸ்கிராட்ச் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக ஒருவரைௌ கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT