தற்போதைய செய்திகள்

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கோரிக்கை

DIN

புது தில்லி: திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் திருச்சி சிவா முன்வைத்த கோரிக்கை:

சிறந்த பேச்சாளா், எழுத்தாளா், நாவலாசிரியா், சிறுகதை எழுத்தாளா், அறக்கொடையாளா், நாடகாசிரியராக இருந்தவா். நடிகராவும் இருந்தவா். 80 படங்களுக்கு ‘ஸ்கிரிப்ட்’ எழுதியவா். அவருடைய வாழ்க்கையில் பல சாதனைகளைச் செய்துள்ளாா். அவா் தனது இறுதி மூச்சுவரை சமூக நீதி, மதச்சாா்பின்மை, மாநில தன்னாட்சி, சுயமரியாதைக்காக போராடினாா்.

 ஐந்து முறை முதல்வராக இருந்துள்ளார்.  குடிசைகள் அகற்றப்பட வேண்டும். அவா்கள் வசிக்கும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் வர வேண்டும் என்று அவா் கூறுவாா். அவரை வரலாற்றில் ஒரு சகாப்தம் என்று அழைத்தால் அது மிகையாக இருக்காது.

 அவருக்கு இறப்புக்கு பிந்தைய கெளரவமான ‘பாரத ரத்னா’ விருதை மத்திய அரசு வழங்க வேண்டும். அதுதான் அவரது சிறந்த பணிக்கு உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றாா் திருச்சி சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT