முகப்பு
தற்போதைய செய்திகள்

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. 17ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

மாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. 17ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: -

மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து, ஜன., 20ல் அடைக்கப்பட்ட சபரிமலை நடை, இன்று மாலை, 5.00 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, நடை திறந்து விளக்கேற்றினார். வேறு பூஜைகள் நடக்கவில்லை. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. 

நாளை அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்கு பின், நெய்யபிஷேகம் ஆரம்பமாகும். 17ம் தேதி வரை, தினமும் காலை, 5:30 முதல் பகல், 12:00 மணி வரை நெய்யபிஷேகம் நடக்கும்.

எல்லா நாட்களிலும் இரவு, 7.00 மணிக்கு படிபூஜை நடக்கும். இவற்றுடன் களபபூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை ஆகியவை நடக்கும்.வரும், 17ம் தேதி இரவு, 10.00 மணிக்கு நடைசாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →