தற்போதைய செய்திகள்

பணியிட மாறுதல் யாருக்கு கொடுக்கலாம்? பூவா தலையா போட்டு பார்த்த பஞ்சாப் அமைச்சர்

DIN

பஞ்சாப்பில் பாலிடெக்னிக் கல்லூரியில்  ஒரு விரிவுரையாளர் பதவி பணியிட மாறுதல்  தொடர்பாக இரண்டு பேர் போட்டியிட்ட நிலையில்  சரியான நபரை தேர்வு செய்ய ஒரு நாணயத்தை சுட்டிப் போட்டு அமைச்சர் ஒருவரை தேர்தெடுத்துள்ளார். 

அமைச்சரின் இந்த செயல் அங்குள்ள கேமராவில் பதிவானதோடு அது ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள  காங்கிரஸ் செய்திதொடர்பாளர் மாநிலத்தில் ஆளும் கட்சி வெளிப்படையாக இருப்பதாகவும் தேவையில்லாமல் ஊடகங்கள் இதை சர்ச்சைக்குள்ளாக்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.  

பாட்டியாலாவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு நாபாவிலிருந்து ஒருவரும் பாட்டியாலாவிலிருந்து ஒருவரும் போட்டிப் போட்டனர்.

இந்த சிக்கலை தீர்க்க, பஞ்சாபின் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் சரண்ஜித் சிங் சானி ஒரு நாணயத்தைத் சுண்டி பூவா தலையா போட்டு முடிவு செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT