மலேசியாவிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.8.75 லட்சம் மதிப்புள்ள 289 கிராம் தங்கத்தை திருச்சி மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த விமானப் பயணிகளிடம் சோதனை செய்ததில், சென்னையை சேர்ந்த சாந்தி நடேசன் என்பவரின் உடைமைகளை சோதனையிட்டதில் மறைத்து எடுத்து வந்த 289 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8.75 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விமான நிலைய மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.