தற்போதைய செய்திகள்

திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.8.75 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN

மலேசியாவிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.8.75 லட்சம் மதிப்புள்ள 289 கிராம் தங்கத்தை திருச்சி மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த விமானப் பயணிகளிடம் சோதனை செய்ததில், சென்னையை சேர்ந்த சாந்தி நடேசன் என்பவரின் உடைமைகளை சோதனையிட்டதில் மறைத்து எடுத்து வந்த 289 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8.75 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விமான நிலைய மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT