பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சவிதா சிறப்பு ரயில் ஜன.11,12,13 தேதிகளில் இரவு 9.50 மணிக்கு இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை வரை செல்லும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி 5, 11, 12, 13, 19 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது.
நெல்லையில் இருந்து எழும்பூருக்கு ஜன. 7,28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.