தற்போதைய செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனம் மீது குண்டு வீச்சு: வீரர் காயம்

ANI

 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஹைடர்போரா பகுதி வழியாக ரோந்து சென்ற பாதுகாப்பு படை வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் வீரர் ஒருவர் காயமடைந்தார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் ஹைடர்போரா பகுதி வழியாக இன்று பிற்பகல் வழக்கம்போல் மத்திய துணை ராணுவப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வாகனங்களின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் துணை ராணுவப் படையை சேர்ந்த ஒரு வீரர் காயமடைந்தார்.

இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT