ஆந்திர மாநிலத்தில் 'அண்ணா உணவகம்' என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.
இங்கே மதிய உணவு 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மேலும் மாநிலத்தின் 110 நகராட்சிகளில் அண்ணா உணவகத்தை திறக்க முடிவு செய்துள்ளது.
கடந்த தேர்தல் வாக்குறுதியில் அண்ணா கேண்டீன் திறக்கப்படும் என சந்திரபாபு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.