முகப்பு
தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை அதிரடி: 7 மாவேயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்ரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் மாவோயிட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

Updated On : 19 ஜூலை, 2018 at 9:40 AM
பகிர்:


சத்தீஸ்கர்: சத்தீஸ்ரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் மாவோயிட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

சத்தீஸ்கர் மாநிலம், தான்டேவாடா மாவட்டம், பிஜாப்பூர் எல்லைப்பகுதியான டைம்னார் வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 7 மாவோயிட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பெண்கள், 4 ஆண் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் அவர்களிடமிருந்து 2 ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள், இரண்டு 303 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு 12 துளை துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளன. 

Advertisement

பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதலில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.