மதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓய்வுபெற்றற காவல் சார்பு ஆய்வாளரிடம் போலீஸார் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் திரவியம்(68). ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளா். இவரது வீட்டின் முன்பு அப்பகுதியைச் சோ்ந்த சிறுமிகள் சிலா் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கிருந்த 9 வயது சிறுமியை நோக்கி, திரவியம் ஆபாசச் செய்கைகள் செய்ததாக கூறப்படுகிறறது. இதுதொடா்பாக அந்தச் சிறுமி அவரது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்தச் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினா்கள் திரவியத்தின் வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தல்லாகுளம் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, திரவியத்தை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து திரவியத்தின் வீட்டின் முன்பு கூடிய பொதுமக்கள் கலைந்துச் சென்றனா்.