முகப்பு
தற்போதைய செய்திகள்

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கு: தில்லி உயர்நீதிமன்றத்தில் வரும் 7-ம் தேதி  ஆஜராக சசி தரூருக்கு சம்மன்

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக வரும் 7-ம் தேதி தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள்

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

புதுதில்லி: சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக வரும் 7-ம் தேதி தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி, தில்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை தில்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர்.

சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →