தற்போதைய செய்திகள்

மாணவர்களின் பாசப்போராட்டதால் பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தி வைப்பு!

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் பணியிட மாற்றம் மாணவர்களின் பாசப்போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வெள்ளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள பகவான் என்பவர் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என நேற்று முன்தினம் மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் நேற்று பணிமாறுதல் உத்தரவை பெற வந்த ஆசிரியர் பகாவனை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கதறி அழுததுடன் ஆசிரியரை பிரிய மனமில்லா மாணவர், மாணவிகள் கண்ணீருடன் வேறு பள்ளிக்குச் செல்ல வேண்டாம், இங்கேயே பணியாற்ற வேண்டும். நீங்கள் பாடம் நடத்தினால் அனைவரும் தேர்ச்சி பெறும் என வேண்டுகோள் விடுத்தனர். அப்போது மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு அழுததும், மாணவ, மாணவிகளின் கண்ணீரை கண்ட ஆசிரியரும் கண்கலங்கி அழுத காட்சி காண்போரை மனம் உருகச் செய்யது. 
பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸார் செயவதறியமால் திகைத்தனர். 

இந்நிலையில், ஆங்கில ஆசிரியர் பகவானின் பணி மாறுதல் தற்காலிகமா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT