சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் முதல்வர் ரமன் சிங் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ரமன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசின் சார்பில் ‘முதல்வர் கன்னியா விவாக திட்டம்’ மூலம் ஏராளமான இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பஸ்டர் மாவட்டம், ஜகதல்பூர் பகுதியில் முதல்வர் ரமன் சிங் முன்னிலையில் 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது.
இதில், 11 ஜோடிகளுக்கு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. அரசு சார்பில், மணமகன்கள் மற்றும் மனமகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு தம்பதியினருக்கும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.