தற்போதைய செய்திகள்

வீர மரணமடைந்த 3 ராணுவ வீரர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. 

குப்வாரா மாவட்டம், ஆரம்போரா பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
  

தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் மேலும் 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். 3 ராணுவ வீரர்கள் மற்றும் 2 போலீசார் உட்பட மொத்தம் 5 வீரர்கள் இத்தாக்குலில் வீர மரணம் அடைந்துள்ளனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நீடித்தது. முடிவில், பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த 3 ராணுவ வீரர்களின் உடல்களுக்கு ஸ்ரீநகரில் சக வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT