தற்போதைய செய்திகள்

நிபா வைரஸ்: கேரளத்தில் மேலும் ஒருவர் பலி 

நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கேரளத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்ததை அடுத்து பலியானோரின் எண்ணிக்கை 13-ஆ

DIN

நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கேரளத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்ததை அடுத்து பலியானோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரளத்தில் கண்டறியப்பட்ட நிபா வைரஸானது, அந்த மாநிலத்தை மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. அண்மையில் கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்த மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அவர்களில் 12 பேருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியானது. அவர்களில் செவிலியர் ஒருவரும் அடக்கம்.

இந்த நிலையில், வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், அவை பலனின்றி அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜன், அசோகன் ஆகிய இருவரும் வைரஸ் பாதிப்பின் தீவிரம் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். இதை கேரள அரசு உறுதிபடுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நிபா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றுவந்த அபின்(26) இன்று சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார். இதனால் நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. 

நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மாநில அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"சிரிப்பு காட்ற எனக்கு எதுக்கு SIX Pack?" Champions of Tamilnadu நிகழ்வில் யோகி பாபு!

போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்!

மார்ச் 31-க்குள் 300 நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரம்!

"விடுதிகளுக்கு AC வசதி!" விளையாட்டு வீரரின் வேண்டுகோளுக்கு துணை முதல்வர் தந்த பதில்!

சர்வதேச விளையாட்டு நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT