தற்போதைய செய்திகள்

ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

DIN


குவைட்டோ: ஈக்வடார் நாட்டில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பகுதியை மையமாக கொண்டு 112 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார்மையம் கூறியுள்ளது. 

தலைநகர் குவைட்டோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் இருக்கும் கட்டடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. இதையடுத்து வீடுகளில் இருந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி, வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் பல கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புவேர்டாஸ் நேக்ராஸ், கானோ மற்றும் சுஞ்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016 -ஆம் ஆண்டு ஈக்வடார் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தினால் 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT