அரசியல் வானில் தோன்றிய துருவ நட்சத்திரம் பிரதமர் நரேந்திர மோடி என மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிறையில் கைதிகள் புகைப்படம் காரணமாக, வெளியே இருப்பதை விட சிறையில் இருந்தால் நன்றாக இருக்கலாம் என்ற எண்ணம் மக்களுக்கு வந்துள்ளது. சிறையில் கைதிகளுக்கு சொகுசாக வாழ உதவிய காவல் அதிகாரிகளை கண்டுபிடித்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
மேலும், திமுகவுக்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே தேர்தல் ஜூரம் வந்துவிட்டது என்றவர் அரசியல் வானில் தோன்றிய துருவ நட்சத்திரம் பிரதமர் நரேந்திர மோடி என கூறியுள்ளார்.