புதுதில்லி: உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் நல்ல உடல்நலத்துடனும், ஆரோக்கியத்திற்காகவும், இறைவனிடம் பிராத்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான அஜய் மக்கான், சில தினங்களுக்கு முன்பு தான் எலும்பியல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறேன். ஆனால், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் வலியை போக்குவதற்காக மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாக தனது டுவிட்டர் பக்க பதிவில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்க பதிவில், அன்பான அஜய் மக்கான் ஜி, நீங்கள் நல்ல உடல்நலத்துடனும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.