பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால் பால் பணப்பட்டுவாடா பாதிப்படையக் கூடாது என்பதாலும், நுகர்வோருக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தவும் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி அறிவித்தது. இந்த விலை உயர்வானது இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) முதல் நடைமுறைக்கு வந்தது.
ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு லிட்டர் மெஜந்தா நிற கவரில் உள்ள பால் ரூ.40-க்கும், நீல நிற கவரில் உள்ள பால் ரூ.43-க்கும், பச்சை நிற கவரில் உள்ள பால் ரூ.47-க்கும், ஆரஞ்சு நிற கவரில் உள்ள பால் ரூ.51-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆவின் பால் விலை உயர்வுக்கு அனைத்துக்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.