திருச்சி: திருச்சியில் சிறுமிகளின் ஆபாச வீடியோகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமிகளின் ஆபாச வீடியோகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக திருச்சியில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை திருச்சி பாலக்கரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், நிலவன், ஆதவன் என்ற பெயர் கொண்ட கணக்கு மூலம் வீடியோக்களை பகிர்ந்ததாகவும், 15 பேர் கொண்ட வாட்ஸ் ஆப் குழுவை கிறிஸ்டோபர் நடத்தி வந்ததாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
சிறுமிகளின் ஆபாச வீடியோ தொடர்பாக கிறிஸ்டோபர் அல்போன்ஸ் தமிழகத்தில் முதல் கைது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிறுமிகளின் ஆபாச வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்டோபர் அல்போன்ஸ் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வித்தித்து உத்தரவிட்ட நீதிமன்றம், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, திருச்சியில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறுவார் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.