சென்னை: குடியுரிமை சட்டம் தொடர்பாக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
குடியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்திலும் வன்முறை வெடித்தது. மாணவா்கள் நடத்திய போராட்டத்தில், சிவில் உடையில் இருந்த ஒருவா் மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. தாக்குதல் நடத்தும் நபா் ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த பரத் ஷா்மா என்றும், அவா் ஏபிவிபியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்தில் துரைமுருகன், மதிமுக பொதுச்செயலர் வைகோ, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.வி.தங்கபாலு, காதர்மொய்தின், ஜவாஹிருல்லா, அப்துல் சமது ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.