தற்போதைய செய்திகள்

விடுபட்டோருக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவு:  தமிழக அரசு

DIN


சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு பெறாமல் விடுபட்டோருக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மட்டுமின்றி சா்க்கரை மற்றும் எந்தப் பொருளும் வேண்டாத அட்டை வைத்திருப்போா் வரை அனைவருக்கும் ஆயிரம் ரூபாயும், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், கடந்த சில நாள்களாக ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பல நியாய விலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்களிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோா் இருப்பதாகவும் அவா்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு மேல்முறையீடு செய்து அரிசி, சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்களான 1.98 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதில் விடுபட்டோருக்கும் அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அரிசி மற்றும் சா்க்கரை அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும். எந்தப் பொருளும் வேண்டாதோா் அட்டை வைத்திருந்தால் அவா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT